சென்னை: 2வது கணவர் கொடுத்த புகாரின் பேரில், முன்னாள் எம்.பி.யும், தற்போதைய பாஜக உறுப்பினருமான சசிகலா புஷ்பாவுக்கு உயர்நீதிமன்றம் தலைமறைவாக ஆக கூடாது என்று கூறியதுடன் தினசரி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.

சர்ச்சைக்கு பேர்போனவர் சசிகலா புஷ்பா. அதிமுக எம்.பி.யா இருந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி திருச்சி சிவாவை கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் அதே சிவாவுடன் சல்லாபத்தில் ஈடுபட்டதும் அனைவரும் அறிந்ததே.

இவரை அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கியபோது,  ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் தன்னை கன்னத்தில் அறைந்தனர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், தனது கணவரை விட்டு பிரிந்து டெல்லியில், வழக்கறிஞர் ராமசாமி என்பவரை காதலித்து மணம் செய்துகொண்டார்.

இவர் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு  தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம், சசிகலா புஷ்பா கணவர், வழக்கறிஞர் ராமசாமி சென்னை காவல் நிலையத்தில் சசிகலா புஷ்பா மீது பகீர் புகார் அளித்தார்.

அவரது புகார் மனுவில், மதுரையிலிருந்து சென்னைக்கு திரும்பிய போது வீட்டின் படுக்கை அறையில் சசிகலா புஷ்பா இருந்தார் எனவும், மற்றொரு படுக்கையில் மர்ம நபர் ஒருவர் இருந்தார் எனக் கூறினார். மேலும் அமுதா என்ற பெண்ணும் இருந்ததாகவும் வீட்டில் மதுபானங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள் சிதறி கிடந்ததாக கூறினார். இதுதொடர்பாக தான் அவரிடம் விசாரித்த போது, அவர் தன்னை மிரட்டியதாக கூறியிருந்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை முடிவில் சசிகலா புஷ்பா தஞ்சாவூர் ராஜா அமுதா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் காரணமாக, தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சிய  சசிகலா புஷ்பா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருநதார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.  இதையடுத்து  உயர் நீதிமன்றம் சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, 15 நாட்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தலைமறைவாக இருக்க கூடாது என்றும் இரண்டு நிபந்தனைகளை சசிகலா புஷ்பாவுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சசிகலா புஷ்பா தனது வீட்டில் சசிகலா புஷ்பா பாலியல் தொழில் செய்ததாக குற்றம் சாட்டும் அவரது கணவர்  இரண்டாவது கணவர் ராமசாமி, தற்போது விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.