தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில்  6 வயது சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்டு குடிநீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த  சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக  பிரகாஷ் (வயது 18) என்பவர்  கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே, சிறுவன் தன்னிடம் இருந்த செல்போனை தராததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக  தகவல் வெளியான நிலையில், தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில், சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

த;uமபுரி மாவட்டம், புழுதிக்கரை அருகே  காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  தம்பதியினரின் மகன்   மதியரசு. 6வயதுள்ள இந்த சிறுவனன் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.  இவர், கடந்த 16-ம் தேதி வீட்டின் அருகே விளையாடச் சென்ற நிலையில், திடீரென மாயமானார். இதையடுத்து சிறுவனை தேடிய பெற்றோர், இதுகுறித்து, அருகே உள்ள  கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில் சிறுவன் அங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இறந்து கிடந்தது  கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த நிலையில், குடிநீர் தொட்டிக்குள் சிறுவன் சடலமாக கிடந்தது எப்படி என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அவரது உயிர் போனதற்கு வீடியோ கேம் மோகம் தான் காரணம் என்று கூறப்பட்டது.  மேலும், அந்த சிறுவனுடன் நெருக்கமாக பழகும்,  உறவினரான 18 வயது வாலிபனை  பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 16-ம் தேதி அவரது செல்போனை வாங்கி நீண்ட நேரமாக மதியரசு வீடியோ கேம் விளையா டியுள்ளார். அத்துடன் செல்போனை தர மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மதியரசுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்து செல்போனைப் பறித்ததாகவும், தான் அடித்த தால், சிறுவன் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டதால், அவர் உயிரிழிந்து விட்டதாக நினைத்து,  சிறுவனின் கை கால்களை கயிற்றால் கட்டி அருகே பயன்பாட்டில் இல்லாமல் இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தள்ளி விட்டதாக தெரிவித்து உள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள வாலிபன் பெயர் பிரகாஷ் என்பதும், அவர்  சில வாரங்களுக்கு முன்பு, அந்த பகுதியில் கோழி கூண்டு செய்வதற்கு வந்தபோது,  அந்த சிறுவனுடன் நெருங்கி பழகியது தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று, சிறுவனை, பிரகாஷ் தனது  இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றதும், வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூங்காவில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும்  உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சிறுவனை கொன்ற 18வயது வாலிபன் தனியாக சிறுவனின் உடலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு எடுத்துச் சென்றிருக்க முடியாது. இதில் மர்மம் உள்ளது. கொலை செய்த வாலிபனுக்கு உதவியாளர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.