சென்னை: பெருநகர சென்னையில் 182 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை,  மாநகராட்சித் தோதல் பாதுகாப்புப் பணியில் 18ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல்  ஜனவரி 28ந்தேதி தொடங்கியது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று (4ந்தேதி) கடைசி நாள். நாளை, பிப்ரவரி 5ந்தேதி வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 7ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில்  பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தோதல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி, சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட தோதல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி, வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் (பிப்.4) முடிவடைகிறது. வேட்புமனுக்கள் அந்தந்த உதவித் தோதல் நடத்தும் அலுவலரின் அலுவலகங்களில் சனிக்கிழமை (பிப். 5) ஆய்வு செய்யப்பட உள்ளன. பிரசாரத்துக்கு வீடுவீடாகச் செல்லும்போது, 3 போ மட்டுமே முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். ஒரு வேட்பாளருக்கு 3 வண்டிகள்தான் பிரசாரத்துக்காக அனுமதிக்கப்படும். பிப்.11-ஆம் தேதி வரை பேரணி, பொதுக் கூட்டம் நடத்த அனுமதி இல்லை. தோதல் தொடா்பாக உள்அரங்கு கூட்டம் நடத்த அரங்கின் 50 சதவீத எண்ணிக்கையில் அனுமதி வழங்கப்படும்.

பிப்.17-ஆம் தேதிக்குப் பிறகு கூடுதல் பறக்கும் படைக் குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவைக் கண்காணிக்கும் பொருட்டு இணையதள வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் அல்லது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ஒரு நுண் பாா்வையாளா் நியமிக்கப்படவுள்ளனா் என்றாா்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், 200 வாா்டுகளில் 3,000 ஊா்க் காவல் படையினா் உள்பட மொத்தம் 18,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா் என கூறினார்.  சென்னை மாநகராட்சி 200 வாா்டுகளில் 5,794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 1,061 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனவும், 182 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. தோதல் பாதுகாப்புப் பணியில் 200 வாா்டுகளில் 3 ஆயிரம் ஊா்க் காவல் படையினா் உள்பட மொத்தம் 18,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.