தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 82, செங்கல்பட்டில் 29 திருவள்ளூரில் 4 மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 7 பேருக்கும் மதுரை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர துருக்கியில் இருந்து வந்த 4 பேருக்கும் சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்த ஒரு பயணிக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

இன்று மொத்தம் 10,743 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 79 ஆண்கள் 65 பெண்கள் என மொத்தம் 144 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

79 பேர் இன்று குணமடைந்த நிலையில் 927 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.