டெல்லி: எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 142 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து I.N.D.I.A கூட்டணி சார்பாக 22ந்தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெற இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

I.N.D.I.A கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் டெல்லியில்  நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆலோசனை கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் இருந்து எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக நாடு முழுவதும் வரும் 22ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில்அத்துமீறி நுழைந்த இருவர் புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர்.  இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், நாடாளுமன்ற பாதுகாப்பும் கேள்விக்குறியாக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் அமளியில் ஈடுபடும் எம்.பி.க்களை மக்களவை மற்றும் மாநிலங்களவை  தலைவர்கள்  கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதுவரை 142 எம்.பி.க்கள் இடைநிக்கம் செய்யப்பட்டுள்ளது. . அதன்படி, மக்களவையில் 95 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 46 உறுப்பினர்களும் என இதுவரை மொத்தம் 141 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  டெல்லியில் நடைபெற்ற இண்டியான கூட்டணி கட்சிகளின்  கூட்டத்தில், எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து  நாளை மறுநாள் (22ந்தேதி)  நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் இருக்கின்றன. இந்த விரக்தியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சீர்குலைத்து முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய பாராளுமன்ற வரலாற்றில் முதல்முறை: 142 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள அவலம் – விவரம்…