டெல்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 20,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 38 பேர் பலியாகி உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 5.10 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேரத்திலான கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில்,  20,139 பேர் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,89,989ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி  மேலும் 38 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின்  உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 5,25,557-ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 16,482 -பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,28,356 -ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.49% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,36,076 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.31% ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,99,27,27,559 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,44,714 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.