தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பறக்கும் படையினர் சோதனை தீவிரப்படுத்தப்படும். வாகன சோதனை காரணமாக சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.எனவே ரூ. 1 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்படும். இதுபற்றி ஆலோசனை வழங்கியுள்ளோம். விரைவில் இதுபற்றி அறிவிப்பு வெளியிடப்படும்.ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் 24 மணி நேரத்துக்குள் விசாரித்து பணம் திருப்பி கொடுக்கப்படும். ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் விசாரித்து 3 நாட்களில் திருப்பி கொடுக்கப்படும் என ராஜேஷ் லக்கானி கூறினார்.
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி

 

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பறக்கும் படையினர் சோதனை தீவிரப்படுத்தப்படும். வாகன சோதனை காரணமாக சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.எனவே ரூ. 1 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்படும். இதுபற்றி ஆலோசனை வழங்கியுள்ளோம். விரைவில் இதுபற்றி அறிவிப்பு வெளியிடப்படும்.ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் 24 மணி நேரத்துக்குள் விசாரித்து பணம் திருப்பி கொடுக்கப்படும். ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் விசாரித்து 3 நாட்களில் திருப்பி கொடுக்கப்படும் என ராஜேஷ் லக்கானி கூறினார்.