சித்தூர்

ந்திர மாநிலம் சித்தூரில் 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 பேர் செம்மரம் கடத்தல் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சித்தூர் – பெங்களூரு நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அவர்கள் 2 மகிழுந்துகளை மடக்கிப் பிடித்துள்ளனர்.  அந்த வாகனத்தில் கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   அதையொட்டி 8 செம்மரக்கட்டைகள் மற்றும் 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சோதனையில் வாகனத்தில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் என 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இவர்கள் தமிழகத்தில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களையும் ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்

மேலும் சித்தூர் – கடப்பா சாலையில் நடந்த சோதனையில் 2 வாகனங்களில் இருந்து 4 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   இந்த சோதனையின் போது 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் ஐவரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்  ஆவார்கள்.