நெடுந்தீவு,

ல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். மீன்பிடி வலைகளை அறுத்தும் சேதப்படுத்தினர்

இதையடுத்து, 9 மீனவர்களை நெடுந்தீவு அருகே 2 படகுகளுடன் சிறைப்பிடித்தனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களையும் படகுடன் சிறைபிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.