சென்னை:  தமிழ்நாட்டில் இன்று மேலும் 657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் புதிதாக மேலும் 657பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 382 பேர் ஆண்கள்,  275 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 36ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 12 பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கை 36 ஆயிரத்து 624 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் இன்று மேலும் 702 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 91 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது.”

மருத்துவனைகளில் சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 666 ஆக அதிகரித்துள்ளது

கொரோனா தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.  தலைநகரில் 114  பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கோவையில் 101 பேருக்கும், ஈரோட்டில் 53 பேருக்கும், செங்கல்பட்டில் 47  பேருக்கும், நாமக்கல்லில் 47 பேருக்கும்  திருப்பூரில் 46 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 114  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 55,95,81 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 108 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3 உயிரிழந்துள்ளனர். தற்போது சென்னையில் 1311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்புமாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 1
செங்கல்பட்டு 47
சென்னை 114
கோவை 101
கடலூர் 7
தர்மபுரி 9
திண்டுக்கல் 2
ஈரோடு 53
கள்ளக்குறிச்சி 1
காஞ்சிபுரம் 17
கன்னியாகுமரி 12
கரூர் 15
கிருஷ்ணகிரி 13
மதுரை 7
மயிலாடுதுறை 1
நாகப்பட்டினம் 3
நாமக்கல் 47
நீலகிரி 19
பெரம்பலூர் 1
புதுக்கோட்டை 3
ராமநாதபுரம் 0
ராணிப்பேட்டை 6
சேலம் 43
சிவகங்கை 4
தென்காசி 2
தஞ்சாவூர் 15
தேனி 0
திருப்பத்தூர் 3
திருவள்ளூர் 20
திருவண்ணாமலை 7
திருவாரூர் 5
தூத்துக்குடி 2
திருநெல்வேலி 3
திருப்பூர் 46
திருச்சி 15
வேலூர் 7
விழுப்புரம் 3
விருதுநகர் 2