டெல்லி: இந்தியாவில் கடந்த 23மணி நேரத்தில் 2,841 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுஉள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்பு குறைந்துள்ளது மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து அறிக்கை  வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில்  மேலும்  புதிதாக 2,841 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,16,254 -ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி  09 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,190 -ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

நேற்று மட்டும்  3,295 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,73,460 -ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெறுவோர் 18,604 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,03,220 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,90,99,44,803 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.