சென்னை

தமிழகத்தில் ரம்ஜான் மற்றும் வார விடுமுறையையொட்டி 1285 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன/

நேற்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

““ரம்ஜான் பண்டிகை வருகிற 11 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டியும், 13, 14 ஆம் தேதிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டும் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10 ஆம் தேதி (இன்று) 315 பேருந்துகளும் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 290 பேருந்துகளும், 13 ஆம் தேதி (சனிக்கிழமை) 340 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 

இதே போன்று, சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. 

10  ஆம் தேதி (40 பேருந்துகள்), 12-ந் தேதி (40கள்) மற்றும் 13-ந் தேதிகளில் (40 கள்) என 120 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இது தவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.