சென்னை:
மிழகத்தில் புதிதாக 120 உழவர் சந்தைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை யில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உழவர் சந்தைகள் சரியாக பாராமரிக்கப்படாத நிலையில் உள்ளன. இந்த உழவர் சந்தைகளை சரியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 120 க்கும் மேற்பட்ட புதிய உழவர் சந்தைகளை திறக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும் கூறினார்.