சென்னை: தமிழகத்தில்  நேற்று 16,813 பேர் புதியதாக  கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் 1,223 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தொற்று பாதிப்பு குறித்து மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,08,838 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,223 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,528 ஆக அதிகரித்துள்ளதா சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும்து. அதே வேளையில் நேற்று ஒரேந ளில் கொரோனாவிலிருந்து 32,049 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 20,91,646 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது 1,88,664 பேர் கொரோனா வார்டில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சென்னையில் 12,210 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று 1,223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,22,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில்  45 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 7,658 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும்  3,598 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,02,184 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மண்டலம் வாரியாக விவரம்: