புதுச்சேரி: புதுச்சேரி மாநிலதில்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு உணவகங்களில்வ  10 சதவீத விலை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,  புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அங்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தில் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி, உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், மக்கள் கொரோனா தடுப்பூசி போட அச்சம் காட்டிவரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 10 சதவீதம் விலை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்டதை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த சலுகையை அறிவித்துள்ளதாக புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மக்களே கவனம்: இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் புதிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம்… விவரம்…