சென்னை:  தமிழகத்தில்  நேற்று புதிதாக மேலும் 1,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. அவர்களில் 184 பேர் சென்னையில் பதிவாகி உள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவலின்படி, தமிழ்நாட்டில், இதுவரை 26,68,495 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மேலும் 23 பேர் கொரோனவால் மரணம் அடைந்துள்ளனர்.  இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 35,650 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில்,  இதுவரை 26,15,873  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும்  16,972 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாநில தலைநகர் சென்னையில் நேற்று மேலும் 184 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்மூலம் மொத்த பாதிப்பு  5,50,398 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் மட்டுமே உயிரிழந்தையடுத்து,  இதுவரை 8,491 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். நேற்று மேலும்  194 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்தம் 5,39,981 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது சென்னையில் 1,926 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

03.10.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 54,12,969 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 03.10.2021 அன்று 1,58,144 ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: