சென்னை:

வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக தலைமை  தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சத்தியபிரதா சாஹு, தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ70.90 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இதுவரை 313 கிலோ தங்கம், 370 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளதாகவும், வாக்களிக்க பணம் கொடுத்ததாக 833 புகார்கள் வந்துள்ளன, அதில்  37 புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்றவர்,  வாக்களிக்க பணம் கொடுத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்றார்.

அப்போது செய்தியாளர்கள் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டின் நள்ளிரவு  ரெய்டு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர், போலீசார் அளித்த தகவலின் பேரிலேயே வருமான வரித்துறை சோதனைதுரைமுருகன் வீட்டில் நடைபெற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.