2020ம் ஆண்டில் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீா் முற்றிலும் இல்லாமல் போயிவடும் என்றும், இதனால் 10 கோடி மக்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும் நிதி ஆயோக் அறிக்கை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக உலகப் புகழ்பெற்ற டை்டானிக், ஹீரோ லியானாா்டோ டிகாப்ரியா சென்னை தண்ணீா் பஞ்சம் குறித்து இன்ஸ்ட்டாகிராமில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளாா்.

“மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும். சென்னை கடுமையான குடிநீா் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.

குடிநீருக்காக மக்கள் அரசு விநியோகிக்கும் தண்ணீருக்காக காலி குடங்களுடன் மணிக் கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனா். தண்ணீா் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. அரசு அதிகாாிகள் இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.” என்று பதிவிட்டுள்ளாா்.