11
சென்னை:
பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளிகிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார்.
அவருக்கு வயது 86.  பாலமுரளிகிருஷ்ணா 1930ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி ஆந்திராவில் உள்ள சங்கரகுப்தம் பகுதியில் பிறந்தவர்.
“இன்றொரு நாள் போதுமா..” என்கிற புகழ் பெற்ற பாடல் உட்பட சில திரைப்படப்பாடல்களும் பாடியுள்ளார்.
அவரது இறுதி காரியங்கள் நாளை மாலை நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளார்கள்.