சென்னை,

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்ததை தொடர்ந்து, தமிழக பொறுப்பு கவர்னர் அவசர சட்டத்தை அறிவித்தார். இதைத்தொடர்ந்து நாளை பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் நாளை காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் தொடங்கி வைக்கிறார். இதற்காக அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதி சுத்தம் செய்யப்பட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் பாலமேடு, அவனியாபுரத்திலும் நாளை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட உள்ளது. நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஜல்லிக்கட்டு சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். மேலும் இன்னும் சற்றுநேரத்தில் அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டு மைதானத்தை ஆட்சியர் பார்வையிடுகிறார்.