சென்னை

சென்னை நகரில் 15 காவல் அதிகாரிகளைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிக் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று சென்னை ஆவடியில் காவல்துறை நடத்திய சோதனையில் ஏராளமன குடகா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன..  இந்த பொருட்களை வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவிட்டுள்ளார் .

சென்னை காவலாணையர் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் ஏற்கனவே 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமைக் காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் உள்ளனர்.இவ்வாறு அடுத்தடுத்து எடுக்கப்படும் நடவடிக்கையால் காவல் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.