சென்னை

ன்றும் 10 ஆம் தேதியும் காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், பாதுகாப்பாக ரயிலை இயக்கவும் அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள பச்சகுப்பம் பணிமனையில் இன்றும் 10 ஆம் தேதியும் காலை 10.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது

எனவே இப்பகுதியில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

இன்றும் 10 ஆம் தேதியும் காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் சிறப்பு மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

இதைப் போல் ஜோலார்பேட்டையிலிருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் சிறப்பு மின்சார ரயில் இன்றும் 10- ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.

என்று கூறப்பட்டுள்ளது.