ராமேஸ்வரம்

ஞ்சல்துறை மூலம் இணையத்தில்  ராமேஸ்வரம் கோவில் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்துக்களின் புனித பூமிகளில் ராமேஸ்வரமும் ஒன்றாகும்.   இங்கு ஸ்ரீ ராமர் தனது பிரம்மஹத்தி தோஷம் போக பரிகாரமாகச் சிவனுக்குப் பூஜைகள் செய்துள்ளதாகப் புராணங்களில் சொல்லப்படுகின்றன.   ராமரால் பூஜிக்கப்பட்ட சிவன் கோவில் ராமநாத சாமி கோவில் என அழைக்கப்படுகிறது.   இந்தியா முழுவதும் இருந்து இங்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த கோவிலின் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வாங்கப் பக்தர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன்ர்.   இதையொட்டி ஒரு சில தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கோவில் பிரசாதம் மற்றும் தீர்த்தத்தை அதிக விலைக்கு விற்பதாகப் புகார்கள் எழுந்தன.  இதையொட்டி தமிழக இந்து அறநிலையத்துறை ஒரு புதிய ஏற்பாட்டைச் செய்துள்ளது.

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சாமி கோவில் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் அஞ்சல் துறை மூலம் இணையத்தில் விற்பனை செய்யப்படுகிறது.   எனவே மோசடிகள் களையப்பட்டு பக்தர்களுக்குக் கோவிலில் இருந்து நேரடியாகத் தீர்த்த பிரசாதங்கள் இணையத்தின் மூலம் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.