துரை

ர்ச்சைக்குரிய கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக யூ டியூபர் மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் புகழ்பெற்ற யூ டியூப் பதிவர்களில் மாரிதாஸும் ஒருவர் ஆவார்.  இவர் தனது யூ டியூப் சேனலில் பல வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.  அத்துடன் சமூக வலைத் தளங்களிலும் தனது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்.   சமீபத்தில் அவரது டிவிட்டர் பக்கத்தில் தமிழகத்தையும் காஷ்மீரையும் ஒப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையொட்டி அவரைக் கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.  இந்த தகவல் அறிந்த மாரிதாஸ் ஆதரவாளர்களும் பாஜக தொண்டர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்   காவல்துறையினர் மற்றும் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.

காவல்துறையினர் இதைச் சமாளித்து காவல்நிலையத்துக்கு மாரி தாசை அழைத்துச் சென்று அங்கு இருபிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.   ஆனால் பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன் காவல்துறையினர் மாரிதாசைக் காரணம் கூறாமல் அத்துமீறி கைது செய்துள்ளதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.