சென்னை : இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் மாதம் 20ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழுமையான கல்வி உரிமை சட்டம். அதன்படி தனியார் பள்ளிகளில்  இந்த சட்டத்தின்படி சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்.

இலவசக் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களில் இலவசமாக ஏழை, எளிய குழந்தை கள் சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் LKG அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.1 லட்ச இடங்கள் வரை உள்ளன.

இந்த நிலையில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு தொடங்கிய உள்ளது. அதன்படி, 2023-2024ம் ஆண்டுக் கான 25% இடங்களுக்கு ஏப்ரல் மாதம் 20ம் வரை ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம என அறிவிக்கப்பட்டு உள்ளது. .25% இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும்மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இதில் தங்களது குழந்தைகளை சேர்க்க விருப்பமுள்ள பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒரு பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் மே 30-ம் தேதி வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்து உள்ளது.