இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரையுலகினர் சமூக வலைத்தளத்தில் பிஸியாகியுள்ளனர் .

இந்நிலையில் இன்று திருமண வரவேற்பு நடப்பதாக இருந்ததைத் தள்ளி வைத்துவிட்ட யோகிபாபு ஓடிக்கொண்டே இருந்துவிட்டு, இப்போது குடும்பத்துடன் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார் .

மேலும் சினிமாவில் இருக்கும் தொழிலாளர்கள் மட்டுமன்றி, நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அனைவருமே கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.அன்றைக்கு உழைத்தால் அன்றைக்குச் சாப்பாடு என்ற நிலை. அனைவரும் சேர்ந்து அவர்கள் மாதிரியான ஆட்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கூறியுள்ளார் .