சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இணைந்த தமிமுன் அன்சாரி தலைமையிலான  மனித நேய ஜனநாயக கட்சி, இன்று அங்கிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது.  திமுக தலைவரான முதலமைச்சரான ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை உருவாக்குவதில் அதிமுக பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில்,   மனித நேய ஜனநாயக கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் முக்கியஸ்தர்கள் அதிமுக பொதுச் செயலாளரார் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மனித நேய ஜனநாயக கட்சி அறிவித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.