டில்லி

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,92,152 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,362 அதிகரித்து மொத்தம் 2,95,07,438 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,880 அதிகரித்து மொத்தம் 3,74,287 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,13,003 பேர் குணமாகி இதுவரை 2,81,48,977 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 9,72,577 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   கொரோனாவுக்கு இன்னும் சரியான சிகிச்சை முறை கண்டறியப்படாததால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சோதனைகளும் குறைக்கப்பட்டுள்ளன.  அவ்வகையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,92,152 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 37,96,24,626 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.