வேலூர்:

சென்னையில் இருந்து ஈரோடு சென்ற ஏற்காடு விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன் காரணமாக பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

நேற்று இரவு  சென்னையில் இருந்து ஈரோடு சென்ற எற்காடு எக்ஸ்பிரஸ் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இருந்து இறங்கி விபத்துக்குள்ளானது.

ரெயில் நிலையம் அருகே மெதுவான வேகத்தில்  சென்றதால், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. யாருக்கும் காயமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அந்த ரெயிலில் பயணம் செய்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இதுகுறித்து ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இதுபோன்று ரெயில்கள் தடம் புரள்வது அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம், சென்னை-திருவனந்தபுரம் மெயில் தடம் புரண்டபின், எட்டு பேர் காயமடைந்தனர். அப்போது சிக்னல் செயலிழப்பு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதேபோல் கடந்த ஆண்டு பிப்ரவரில் பெங்களூரு-கன்னியாகுமரிஐலண்டு எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒன்பது பெட்டிகள் நரம்பம்பல்லி அருகே தடம் புரண்டது. இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்து குறிப்பிடத்தக்கது.