பெங்களூரு

ர்நாடகா முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பா தன் மீது பாலியல் புகார் அளித்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்துள்ளார். 

பிரபல பாஜக பிரமுகரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மைதானா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக எடியூரப்பா  செய்தியாளர்களிடம்,

“ஒரு பெண் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் என் வீட்டிற்கு வந்து சில பிரச்சனை எனக்கூறி அழுது கொண்டிருந்தாள். அந்த பெண்ணிடம் நான் என்ன விஷயம் என்று அப்பெண்ணிடம் கேட்டேன். நான் தனிப்பட்ட முறையில் இது குறித்து காவல்துறை ஆணையரை, அழைத்து அப்பெண்ணுக்கு உதவுமாறு கூறி அவர்களுக்கு நிதி உதவி செய்தேன்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு சில வாரங்கள் உள்ள நிலையில், தற்போது என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. இந்த புகார் ஆதாரமற்றது. மேலும் என் மீது புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நான் என் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன்.”

என்று கூறினார்.