லகாபாத்

த்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் சாக்‌ஷி மற்றும் அவர் கணவருக்கு பதில் வேறு இருவரை கடத்தி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

உத்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ரா ஆவார்.  பிராமண வகுப்பை சேர்ந்த ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்‌ஷி மிஸ்ரா தனது காதலரான அஜிதேஷ் குமார் என்னும் தலித் வாலிபரை கோவிலில் திருமணம் செய்துக் கொண்டார்.   இவர் திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை ஒட்டி சாக்‌ஷியும் அவர் கணவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

தங்கள் திருமணத்தை பதிவு செய்ய சாக்‌ஷி மற்றும் அஜிதேஷ் ஆகிய இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.   திருமணப் பதிவுக்காக இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு சென்ற போது இருவரையும் துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் கடத்தியதாக செய்திகள் இன்று காலை வெளியாகின.

தற்போது வந்துள்ள செய்தியின் படி இன்று காலை சாக்‌ஷி மற்றும் அவரது கணவர் இருவரும் நீதிமன்றத்தின் அருகே தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதையொட்டி இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  அத்துடன் இவர்களுக்கு பதிலாக வேறு இருவர் கடத்தப்பட்டதாகவும் அவர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.