ழுத்தாளரும், பத்திரிகையாளருமான க.சீ.சிவகுமார் பெங்களூருவில் நேற்று மாலை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அருகேயுள்ள கன்னிவாடி கிராமத்தை சேர்ந்தவர் க.சீ.சிவகுமார் ( வயது 46). இவரது. சொந்த ஊரில் படித்து முடித்த இவர், சிறுவயதில் இருந்தே தமிழார்வம் மிக்கவராக விளங்கினார்.

இவர்  திருப்பூர் பகுதியில் வசித்தபோது,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தியுள்ளார்.

முழு நேர எழுத்தாளராகவேண்டும் நோக்கத்தில் சென்னைக்கு இடம்பெயர்ந்த இவர் விகடன், தினமலர் உள்ளிட்ட பத்திரிகை நிறு வனங்களில் சில ஆண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றி உள்ளார்.

இவர் கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வந்தார். இவரது வீடு இரண்டாவது மாடியில் உள்ளது. நேற்று மாலை எதிர்பாராத விதமாக 2வது மாடியில் இருந்து தவறிவிழுந்து இறந்துள்ளார்.

இவரது சிறுகதை, நாவல்களில் எள்ளல் சுவை மிகுந்திருக்கும். கன்னிவாடி, ஆதிமங்கலத்து விசேஷங்கள், குணச்சித்தர்கள், உப்புக்கடலை குடிக்கும் பூனை, க.சீ.சிவ குமார் குறுநாவல்கள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

மிக குறுகிய காலத்தில் 150க்கும் மேற் பட்ட சிறுகதைகளை எழுதியவர் சிவக்குமார். சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கிய சிந்தனை விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.