சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். காலை 9மணிக்கு வாசிக்கத் தொடங்கிய பட்ஜெட் 12மணி அளவில் வாசித்து முடித்தார்.

இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 2021 மே மாதம் 7 ஆம் தேதி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான புதிய திட்டங்களை அரசு அறிவித்துள்ளது என நிதியமைச்சர் தெரிவித்தார்.

சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“உலக முதலீட்டாளர் மாநாடுக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு

புதிதாக TNTECH CITY அமைக்கப்படும் 

தகவல் தொழில்நுட்ப புரட்சியின் 2-வது கட்டமாக சென்னை, கோவை, ஒசூரில் TNTECH CITY அமைக்கப்படும்

“ஈரோடு, நெல்லையில் ஐடி பார்க்” அமைக்கப்படும்.

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின் வாகனங்களில் 46% வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்

ரூ. 521 கோடியில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழிச் சாலையாக மேம்பாலம் கட்டப்படும்

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ₹1600 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

ஈரோடு, நெல்லை, செங்கல்பட்டில் தலா 1 லட்சம் சதுரடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

ரூ.800 கோடியில் நீர் நிலைகள் புதுப்பிக்கப்படும்

கிராமப்புறங்களில் ரூ.800 கோடியில் 10 ஆயிரம் நீர் நிலைகள் புதுப்பிக்கப்படும்- தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு

அதிக சுற்றுலா பயணிகள் வருவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அரசு உருவாக்கியுள்ள சுற்றுலா கொள்கை விரைவில் வெளியிடப்படும். 

புதிய சிப்காட் தொழிற்பேட்டை ரூ. 410 கோடி மதிப்பில் அமைக்கப்படும்

வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும்

நடப்பு நிதியாண்டில் 574 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது; வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 4,400 ஏக்கர் பரப்பளவு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில் பெருந்திட்ட பணிகள் ரூ. 485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில் பெருந்திட்ட பணிகள் ரூ. 485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ₹40 லட்சத்தில் இருந்து ₹50 லட்சமாக அதிகரிப்பு – நிதியமைச்சர்.

சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைபை சேவைகள் வழங்கப்படும் 

“தீவுத்திடலில் வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி” 

தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட வசதிகளை அமைக்க ரூ. 50 போடி ஒதுக்கீடு

ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் தோல்பொருள் தொழிற்சாலை அமைக்கப்படும். இதனால் 32, 000 பெண்களுக்கு வேலைவாப்பு கிடைக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது