சென்னை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. எனவே இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையைக் கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்த  தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் உலகக்கோப்பை தொடருக்குத் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளுக்கு உலகக்கோப்பை சுற்றுப்பயணமாகக் கொண்டு செல்லப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டது. அவ்வகையில் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில்  அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.