சென்னை

மிழக அரசு அருணை பொறியியல் கல்லூரியில்  ஆக்கிரமிப்புக்கள் கண்டறிந்தால் உடனே அகற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ஏ வ வேலுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியின் சுற்றுச் சுவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நாச்சிப்பட்டு மற்றும் தென்மாத்தூர் இடையே அமைந்துள்ள பெரிய ஏரி பாசன கால்வாயை ஆக்கிரமித்து, கட்டுப்பட்டுள்ளதாகக் கூறி, திருவண்ணாமலையைச் சேர்ந்த டி.எஸ்.சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில், மனுதாரர் அறநிலையத் துறைக்குச் சொந்தமான 23 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்திருந்ததாகவும், 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஏரி பாசன கால்வாயை ஆக்கிரமித்து, அருணை பொறியியல் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வட்டாட்சியர் தலைமையிலான குழு மனுதாரர் குறிப்பிடும் இடத்தை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைப்  பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.