சுவாமிமலை

லகிலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை ஜி 20 மாநாட்டு அரங்க முகப்பில் டில்லிக்கு சுவாமி மலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் செப்டம்பர் மாதம் 9-ந் தேதி, 10-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ‘ஜி-20’ மாநாடு நடைபெற உள்ளது.இந்த மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான நடராஜர் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் உள்ள தேவசேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகள் ராதாகிருஷ்ணன், ஸ்ரீகண்டன், சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடராஜர் சிலையை வடிவமைத்தனர்.

நேற்று இந்த சிலையை இந்திரா காந்தி தேசிய கலை மைய தலைவர் ஆர்த்தல் பாண்டியா தலைமையில், மைய அலுவலர்கள் ஜவகர் பிரசாத், மனோகன் தீட்சத் ஆகியோர் பெற்றுக் கொண்டு. சிலை டில்லிக்கு கண்டெய்னர் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதை அறிந்த பொதுமக்கள், சாலைகளின் இருபுறங்களிலும் திரண்டு நின்று மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்.

சுவாமிமலை ஸ்தபதிகள் இது குறித்து,

”டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலோகத்தால் ஆன நடராஜர் சிலை சோழர் கால முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை டில்லியில் நடைபெறும் ‘ஜி-20’ மாநாட்டு  முகப்பில் நிறுவப்பட உள்ளது.             

சிலையின் மீதமுள்ள 25 சதவீத பணிகளை மேற்கொள்ள இங்கிருந்து 15-க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் டில்லி சென்றுள்ளனர் அவர்கள் அங்கு சிலையை முழுமையாக வடிவமைத்த பின் நிறுவுவார்கள்.

28 அடி உயரம், 21 அடி அகலம் கொண்ட நடராஜர் சிலை 25 டன் எடை உள்ள  இச்சிலை ரூ.10 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த சிலை உலகத்திலேயே மிகப்பெரியது.

என்று கூறி உள்ளனர்.