மதுரை: மதுரை  ரயில்பெட்டி தீ விபத்தின் கோர காட்சிகள் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. இந்த தீவிபத்தின்  பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பாரத் கௌரவ் என்றழைக்கப்படும் யாத்திரைப் பயணிகள் ரயில் அதிகாரை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.  ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது, கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பற்றியதாக கூறப்படுகிறத. இந்த ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருப்பதாக ரயில்வே மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா ரயிலான பாரத் கௌரவ் என்ற  ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த போது,   இன்று (ஆகஸ்டு 26) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் இருந்த பக்தர்கள் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரை ரயிலில், சுமார் 60-க்கும் மேற்பட்டோர்  பயணம் செய்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டத்தை தொடர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் அலறியடித்து ரயில் பெட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இருப்பினும், சில பயணிகள் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தில் இதுவரை  9 பயணிகள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கூறிய ரயில்வே காவல்துறையினர்,  முதலாவதாக, இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 6 பேர் பெட்டியில் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 20 படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 3 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டிருக்கின்ற நிலையில் மற்ற உடல்களை உடன் வந்த உறவினர்கள் மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ஆக்ஸ்டு 17ஆம் தேதி புறப்பட்டு  தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் நேற்று (ஆக. 25) நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தனர். மேலும், ரயில் நிலையத்தின் மைய பகுதியில் இருந்து 1 கி.மீ., தூரத்தில் மதுரை போடி லைன் பகுதியில்  இந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து  தீணை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். தீ பற்றிக்கொண்ட ரயில் பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகள் தனித்துவிடப்பட்டதாக  கூறப்படுகிறது.   மேலும், தீ மற்ற ரயில்களில் பற்றிவிடாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் எஸ்எஸ் காலனி காவல் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்வே விதிகளின்படி, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச்செல்லக்கூடாது. குறிப்பாக, தீப்பெட்டி, பட்டாசுகள் போன்றவைக்கே அனுமதி இல்லாத நிலையில், பயணிகள் எப்படி சிலிண்டரை பயணத்தின் போது எடுத்து வந்தனர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சரியான சோதனைகள் இல்லாதது இதுபோன்ற கோர சம்பவங்களுக்கு காரணங்களாக அமைவதாக கூறப்படுகிறது. மேலும், ரயிலில் புகைப்பிடிப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.