மதுரை :

குரங்கணி காட்டுத்தீயால் காயமடைந்தவர்களிடம் நீதிபதி வாக்குமூலம் பெற்றார். தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய காயமடைந்தவர்களில் நால்வர் மதுரை அரசு மருத்துவமனையிலும், ஐவர் தேனி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காட்டுத்தீயில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி சரண்யா வாக்குமூலம் பெற்றார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் தீயில் சிக்கிய பத்து பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளை கண்காணிக்க 5 ஐஏஎஸ் அதிகாரிகள் தேனி விரைந்திருக்கிறார்கள்.