ஞ்சை

மொபைலில் சார்ஜ் போட்டுக் கொண்டு ஒரு பெண் பேசிய போது போன் வெடித்து மரணம் அடைந்துள்ளார்

.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வசித்து வந்தவர் கோகிலா தனது கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வந்தார். இவர் கபிஸ்தலத்தில் வாட்ச் கடை நடத்தி வந்தார். இன்று அவர் கடையில், மொபைலில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசிக் கொண்டிருந்தார்.

மொபைல் அப்போது திடீரென வெடித்து சிதறியதால் கடை முழுவதும் தீப்பற்றி எறிந்தது. கோகிலா பலத்த தீக்காயமடைந்த கோகிலா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.

கபிஸ்தலம் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, கோகிலாவின் உடலைக் கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மொபைல் வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.