சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்  திமுகவை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

இதை விசாரித்த நீதிமன்றம், விரைவில் தீர்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறி உள்ளது.

தமிழகத்தில், ஏற்கனவே திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளும் சேர்த்து மொத்தம்  21 தொகுதிகள் காலியாக  உள்ளன.

இந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணை யம் அறிவித்து உள்ளது.

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி  தேர்தல் தொடர்பான  வழக்குகள் நீதி மன்றத்தில்  நிலுவையில் இருப்பதால், ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் படவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு கூறியிருந்தார்.

இந்த நிலையில்,  திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்  திமுகவை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது,  அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் வெற்றி பெற்றார். அதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,   தேர்தல் நடந்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம், ஏ.கே போஸ் வேட்புமனுவில் கைரேகை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டது. ஆனால், சுயநினைவோடு இல்லாமல் இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டதாகவும், இரட்டை இலை சிலை சின்னத்தில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே போஸ் இறந்துவிட்டதால் அங்கு இடைத் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில், திருப்பரங்குன்றம் உள்பட   3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப் படாது எனத் தெரிவித்தது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தேர்தல் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என கோரி திமுகவை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க பரிசீலிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.