சென்னை :
மிழக அரசின் தலைமைச் செயலர் பதவி காலம், மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம், கடந்த ஆண்டு பதவியேற்றார். அவரது பதவி காலம், ஜூலையில் நிறைவடைந்தது. கொரோனா பரவல் அதிகமிருந்ததால், பதவி காலத்தை மேலும், மூன்று மாதங்கள் நீட்டிக்கும்படி, மத்திய அரசிடம், தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

அதன்பின், அக்டோபர் மாதம், அவரது பதவி காலம் நிறைவடைந்தது. மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கும்படி, தமிழக அரசு கேட்டுக் கொண்டது .அதை ஏற்று, மேலும் மூன்று மாதங்களுக்கு, பதவி காலத்தை நீட்டித்து, மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி அவரது பதவி காலம், அடுத்த மாதம், 31ம் தேதி நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் மேலும், ஆறு மாதங்களுக்கு, அவரது பதவி காலத்தை நீட்டிக்கும்படி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. இதற்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள், தங்களுக்கு தலைமை செயலராகும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என, அஞ்சுகின்றனர்.