நடிகை ரம்பா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

1992ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நுழைந்த ரம்பா 93ம் ஆண்டு தமிழில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் முத்திரை பதித்தார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வந்த ரம்பா 2010ம் ஆண்டு தொழிலதிபர் இந்திர குமாரை மணந்து திரைப்படங்களை விட்டு விலகினார்.

தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஜோடி ஆர் யூ ரெடி – சீசன் 2 மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்துள்ள ரம்பா மீண்டும் வெள்ளித்திரையில் நுழைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரபல தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு சமீபத்தில் வெளியிட்ட தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ரம்பாவின் கணவர் சமீபத்தில் தன்னை சந்தித்து, அவருக்கு திரைப்பட வாய்ப்புகளை வழங்க வலியுறுத்தியதாக தாணு தெரிவித்திருந்தார்.

இருப்பினும், நடிகை ரம்பாவின் ரீ-என்ட்ரி குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.