‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தின.

நயன்தாரா , காதலர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் ராதாரவியின் பேச்சை கண்டித்தனர். நடிகர் சங்கமும் ராதாரவி நடிக்க தடை விதிப்பதாக எச்சரித்தது. தி.மு.க.வில் இருந்தும் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :

“எனது குடும்பத்தில் பயம் என்பது யாருக்கும் கிடையாது. நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும். சிலர் நடிப்பதை நிறுத்தி விடுவோம் என்கிறார்கள். அது முடியாது. நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி அதை தடுத்து நிறுத்திவிட முடியும். இது என்ன ஐ.நா. பிரச்சினையா. நம்ம பேசியதில் உண்மை இருக்கா? இல்லையா? அவ்வளவுதான்.

உண்மை என்றவன் ஏத்துக்கிட்டு போ. இல்லை என்றவன் விட்டுட்டு போ. கொலையுதிர் காலம் பட விழாவில் பேசியதில் யாராவது மனவருத்தம் அடைந்தால் அவர்களிடம் நான் மன வருத்தப்படுவதாக சொல்லுங்கள் என்று சொன்னேன். மன்னிப்பு கேட்பது என் பரம்பரையிலே கிடையாது. எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். கொலை குற்றமா செய்துவிட்டேன்.”என்று பேசினார்.

அவரை தொடர்ந்து டைரக்டர் பேரரசு பேசும்போது ‘நயன்தாரா குறித்து ராதாரவி பேசியதில் தவறு இல்லை’ என்றார்.