கரூர்:
மூன்றாவது அணி என்பதே பாஜகவுக்கு உதவுவதுதான் இதில் திமுக எங்கு வந்தது? என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகையும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணி அமைத்தல் நாங்கள் 2024 தேர்தலில் நிற்க மாட்டோம் என்றும் அவர்களை ஆதரிப்போம் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகையும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மூன்றாவது அணி என்பதே பாஜகவுக்கு உதவுவதுதான்.பாஜக Bடீம் அதை ஆதரித்துதானே ஆகவேண்டும்.எஜமானர்களின் கட்டளையை மீற முடியுமா?! இதில் திமுக எங்கு வந்தது? ஒருவேளை இப்படி ஆரம்பித்துவிடுவதுதான் இப்போதைக்கு கொடுக்கப்பட்டிருக்கிற வேலையாக இருக்குமோ?! என்று குறிப்பிட்டுள்ளார்.