சென்னை: தமிழக அரசின் நிதிநிலை மேம்படும்போது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அதற்கான திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கலின்போது கூறினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், மகளிருக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கும் அறிவிப்பு இன்று செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதை தமிழ்நாட்டின் இல்லத்தரசிகள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இதுவரை அது தொடர்பான அறிவிப்பு வெளியிடாத நிலையில், இன்றைய நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், இன்றும் அறிவிக்கப்படவில்லை.
இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்கு முக்கியத்தும் வழங்கப்பட்டு உள்ளதுடன், வேளாண் கடன், மற்றும்  பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
ஆனால்,  மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய நிதி மைச்சர் பிடிஆர்,  “மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் சரியான பயணிகளை சென்றடைய, திட்டத்தை வகுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியவர், மாநில நிதிநிலை மேம்படும்போது மகளிருக்கு  ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.