சென்னை,

திமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக… பொறுத்திருங்கள்… இன்று மாலை அறிவிக்கப்படும் என்று  ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக முதல்வர் பழனிச்சாமி நேற்று மாலை அறிவித்தார்.

அதையடுத்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த மா.பா.பாண்டியராஜன் இதை வரவேற்று டுவிட் செய்திருந்தார். ஏற்கனவே ஓபிஎஸ் விதித்த நிபந்தனைகளை எடப்பாடி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இன்று மாலை தனது அணியினருடன் கலந்தாலோசித்து முடிவு தெரிவிப்பதாக கூறி உள்ளார்.

இன்று மாலை கிரின்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், அணிகள் இணைவது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி, அணியின் மூத்த நிர்வாகிகளுடன் பன்னீர் செல்வம்  ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஆலோசனைக்கு பிறகு அணிகள் இணைவது தொடர்பாக அறிவிப்பை பன்னீர் செல்வம் வெளியிடுகிறார்.

இதுகுறித்து,  இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், பொறுத்திருந்து பாருங்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அணிகள் இணைப்பு குறித்த கேள்விக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.