இன்று 14-5-2021)அட்சய திருதியை அன்று  என்ன செய்ய வேண்டும்?

  1. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடிஸ்ரீமந்நாராயணனின் நாமங்களைச் சொல்லி புதிய செயல்களைத் தொடங்க வேண்டும்.
  1. குழந்தைகளுக்குக்கல்வி கொடுக்கும் அட்சராப்பியாசம் செய்யும் சடங்கு ‘அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.
  1. மகாலட்சுமிதிருமால்மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்று தான் சிறப்பு வரம் பெற்றாள்.
  1. கும்பகோணம்பட்டீஸ்வரர்அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்குக் காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனைத் தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
  1. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை, விளங்குளம் கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  1.  அட்சய திருதியை தினத்தில் செய்யப்படும்பித்ருதர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திரிதியை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
  1. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல்பலன்களைத்தரும்.
  1. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
  1. ஏழுமலையான் தன்திருமணத்துக்குக்குபேரனிடம் கடன் வாங்கியதாகப் புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தைப் பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
  1. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத் தரும்.
  1. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாகக்கருதப்படுகிறது.
  1. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை” நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம்பெருகச்செய்வாள்.
  1. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
  1. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும்சோழிகளைப்போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தைக் கொண்டு வரும் அம்சமாகும்.
  1. அட்சய திருதியை தினம்சத்ருசாந்திபூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
  1. அட்சய திருதியையன்று மிருதசஞ்ஜீவினிமந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.
  1. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால்நமசிவாயமந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதிபரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
  1. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர்ஆலயத்தில் உள்ள முக்கூடல்புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
  2. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம்       வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ண கவுரி விரதம் கடைப்பிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
  1. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள்கோவில்களில் இருந்து16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
  1. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறதுபவிஷ்யபுராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாகப் பெருகும்.
  1. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பியகுடத்தைத்தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை பிதர்மகடம்` எனப்போற்றுவர்.
  1. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
  1. அட்சய திருதியை நாளில்பிவசந்த்மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ்திரத்துக்கு உடன் பாடில்லை.
  1. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில்மிருத்யுஞ்சயமந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
  1. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும்பித்ருபூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
  1. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
  1. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்றுபவிஷ்யபுராணம் சொல்கிறது.
  1. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறு பிறவியில் அரசனுக்கு இணையானசெல்வந்தர்களாகப்பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
  1. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம்தானாகத்தேடி வரும்.