சென்னை:  தமிழ்நாட்டுக்கு  மத்தியஅரசு ஏதும் செய்யவில்லை என திமுக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில், மோடி தலைமையிலான பாஜகவின் 9ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாடுக்கு கிடைத்தது என்ன? என்பது குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு மத்திய பாஜக அரசு போதுமான திட்டங்களை நிறைவேற்றுவதில்லை என்றும் குறைவான நிதியே வழங்கப்படுகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்திருந்தார். அப்போது,  தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட ரூ.10.76 லட்சம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, பாஜகவின் 9 ஆண்டு ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் நலனுக்காக நிறைவேற்றி இருக்கும் திட்டங்கள் என்னென்ன என்று வெள்ளை அறிக்கை ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  நேற்று (ஆகஸ்டு 30ந்தேதி) தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு ஆட்சியில், தமிழகத்திற்கு போதுமான திட்டங்கள் நிறைவேற்றப்பட வில்லை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

அவர் கூறியுள்ளது மிகப் பெரிய பொய் என்பதை பாஜக சார்பாக வெள்ளை அறிக்கை மூலம் நிரூபிக்க விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில், தமிழகம் ரூ.10.76 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை,  “திமுக, காங்கிரஸ் கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், வரலாறு காணாத ஊழலால் தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதைத் தவிர வேறு என்ன கிடைத்தது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவின் அடையாளமே பொய்களும் மோசடியும்தான். திரு @mkstalin அவர்கள் அவற்றில் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது மட்டுமே தெரிகிறது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi‘ அவர்களின் தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில், தமிழகம் ₹10.76 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளது.  திமுக, காங்கிரஸ் கூட்டணியான ஐமுகூ ஆட்சியில், வரலாறு காணாத ஊழலால் தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதைத் தவிர வேறு என்ன கிடைத்தது?

“திமுகவின் அடையாளமே பொய்களும் மோசடியும்தான்” என்று விமர்சித்துள்ள அண்ணாமலை, “மு.க.ஸ்டாலின் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது மட்டுமே தெரிகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தனது வெள்ளை அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக வெளியிட்டுள்ளார். இரண்டு மொழிகளிலும் அறிக்கையைப் படிப்பதற்கான இணைப்புகளை தனது  டிவிட்டர் பதிவில் கொடுத்திருக்கிறார்.

அந்த அறிக்கையில்,  விமான போக்குவரத்து, ரயில்வே, சாலைப் போக்குவரத்து, கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு திட்டங்கள், அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

முழு விவரம் காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்து பார்க்கவும்…

book-tamil-1-comprescompressed

Book-English-1.21-MB book-tamil-1-comprescompressed