கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டியில் கூறியுள்ளார்.

இதுவரை மாநிலத்தில் 1.4 கோடி இலவச கொரோனா தடுப்பூசிகளை நாங்கள் வழங்கியுள்ளோம். மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது என கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள உணவு விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணிவரை உணவு விடுதிகள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.