சென்னை

சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு இந்த வாரம் செவ்வாய்க்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோடை விடுமுறை தொடங்கியதிலிருந்து குடும்பத்துடன் பல சுற்றுலா தளங்களுக்கும், கோயில்களுக்கும் சென்று வருகின்றனர். எனவே அனைத்து சுற்றுலா தளங்கள், கோயில்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்தளங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்நிலையில் சென்னை வண்டலூர் அண்ணா அறிவியல் பூங்கா நிர்வாகம்,

“வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக விடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வருகை தந்து வருகின்றனர்.

எனவே சுற்றுலாப் பயணிகளின் வருகையையொட்டி செவ்வாய்க்கிழமை  அன்று வழக்கம் போல் பூங்கா திறந்து வழக்கமான நேரத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.  பிளாஸ்டிக் பொருள்களை யாரும் எடுத்துவர வேண்டாம்”

என்று அறிவித்துள்ளது.